Tuesday, November 29, 2011

தமிழ்

தமிழ் இவ்வளவு அழகானதா

உன்னை காதலிக்க தொடங்கியதும்

உணர்ந்தேன் !!!!! 

உன்னிடம் இருந்து எஸ் எம் எஸ்



உன்னிடம் இருந்து எஸ் எம் எஸ் வந்தால் மட்டும்

இந்த இதயம் படபடப்பது ஏன் ?

வானத்து தேவதை



வானத்து தேவதைகளுக்குள் போட்டி

யார் பூமியில் வந்து பிறப்பது என்று

நல்ல வேலை நீ வெற்றி பெற்றாய்!!!!

ஜாதி, மதம் இல்லாத உலகம்



ஜாதி, மதம் இல்லாத

உலகில் தான் எல்லைகளற்ற

காதல் பறந்து விரியும் !!!

பெண்ணே உன்னை யாரோடு ஒப்பிட்டு பார்க்க



பெண்ணே உன்னை நான் மலரோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
மலர் கர்வம் கொண்டது!

உன்னை நான் நிலவோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
நிலவும் கர்வம் கொண்டது!

உன்னை நான் ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு பார்த்தேன்,
அவளுக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் என்னவளாய் எண்ணி பார்த்தேன்,
எனக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் யாரோடு ஒப்பிட்டு பார்க்க?
நீ கர்வம் கொள்ள !!!!!

என்னவளுக்காக ஒரு கிறுக்கல்


சூரியனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளுக்காக பகலில் நீ வெளிச்சம் தருவதால்,

சந்திரனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் முகம் போல் நீ இருப்பதால்,

கடல் முத்தே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் முக பரு முன்னால் பொலிவிழந்து போனதால்,

கொம்பு தேனே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி
என்னவளின் எச்சில் சுவைக்கு முன்னால் நீ கசந்ததால்.

நதியே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி
என்னவளின், வளைவு, நெளிவு கண்டு வெட்கப்பட்டதால்.

கார் மேகமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின் சிகை அழங்காரம் முன்னால் நீ தோற்றதால்.

மரமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவலுக்காக, மூச்சி காற்றை நீ தருவதால்,

தென்றலே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின், தாவணி வருடலின் முன்னால் தலை குனிந்ததால்.

வானமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின், நினைவலையை, எழுதி முடிப்பதற்குள் நீ முடிந்து போனதால்,

கடவுளே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளை, படைக்க நீ மேல் படிப்பை மேற்கொண்டதால்,

என் இதயமே, உனக்கு என் இதயம் கனிந்த நன்றி,
என்னவளின், நினைவலையை மட்டும் நீ சுமந்திருப்பதால்!!!!!!!!.