Monday, September 3, 2012

கடவுளிடம் அதிகமான ஞாபக சக்தி வாங்க விரும்பினேன்

கடவுளிடம் அதிகமான ஞாபக சக்தி வாங்க விரும்பினேன்

உன்   ஞாபகம் வரவில்லை என்பதற்காக அல்ல.

உன்னை தவிர வேறு எதுவும் ஞாபகத்தில் இல்லை என்பதற்காக. !!!! 

நினைவாற்றலை வளர்க்க விரும்பினேன் !!!!!

நினைவாற்றலை  வளர்க்க விரும்பினேன் !!!!!

என் நினைவு முழுவதும் உன்னை சுற்றுவதால் !!!!!

Tuesday, August 14, 2012

தியாகம்

தமிழுக்கு உன்னை போல் யாரும்
தியாகம் செய்திருக்க முடியாது !!!!

வள்ளுவன் காலத்தில் நீ பிறக்காதது
ஒரு தியாகம் !!!!!
இல்லை என்றால் திருக்குறளுக்கு
பதிலாக வள்ளுவன் உன்னை பற்றி
கவிதைகளை மட்டும் எழுதியிருப்பான் !!!!!!


சங்ககாலத்தில் நீ பிறக்காதது இன்னும்
ஒரு தியாகம் !!!!

இல்லை என்றால் காவியங்களும், காப்பியங்களும்
கிடைக்காமல் உன்னை பற்றிய வர்ணனைகள்
மட்டும் கிடைத்திருக்கும்!!!!!



Wednesday, August 8, 2012

படி படி படி


படி படி படி
இல்லனா உனக்கு அடி!!!!!

படிச்சா உனக்கு பாராட்டு
இல்லனா நீ ஒரு வெத்து வேட்டு!!!!!

படிச்சா நீ பெறலாம் பட்டம்
இல்லனா உலகம் மட்டம் தட்டும்!!!!!

படிச்சா உலகம் உன்னை மதிக்கும்
இல்லனா  தூக்கி போட்டு மிதிக்கும்!!!!!

படிப்பு ஒரு பொக்கிஷம்
அதனால் உன் வாழ்வில் சந்தோசம்!!!!!

படிப்பு உன்ன காக்கும்
பகுத்தறிய பார்க்கும்!!!!!!

அதனால, படி படி படி
இல்லனா உனக்கு அடி!!!

ஏன் அப்படி செய்தாய் ?

ஏன் அப்படி செய்தாய் ?

எதற்காக தூங்கினாய் ???

அதுவும் பூந்தோட்டத்தில் !!!!!!!!

உன் இதழில் வந்து  தேன் பருகிய வண்டுகள் அனைத்தும்

பூக்களின் தேனை பருகாமல் தவம் இருக்கின்றன நீ வர வேண்டி!!!!!!


வருடத்தில் அந்த ஒரு நாள் மட்டும்

வருடத்தில் அந்த ஒரு நாள் மட்டும்,

 எவ்வளவு தவம் செய்திருக்கும்,

 என்னவளின்  பிறந்தநாளை மாற!!!!!!! 

Sunday, August 5, 2012

தேவதைகள் கெஞ்சினார்கள்

தேவதைகள் கெஞ்சினார்கள் என்பதற்காக 

உன்னிடம் இருந்து எதையும் விட்டு கொடுக்காதே !!!!!   

கண் பரிசோதனை செய்ய விரும்பினேன்

கண் பரிசோதனை செய்ய விரும்பினேன்

நடக்கும்  நிலவை   கண்டு !!!!!

இனிமேலாவது என் முன்னே மௌனமாக

நடந்து  செல்லாதே!!!!!!!  

Thursday, August 2, 2012

நான்.....கோபம்.....படும்....போது......என்....நினைவுக்கு.....வா

நான் கோபம் படும் போது என் நினைவுக்கு வா ,
கொஞ்சம் அமைதி ஆகிறேன் !!!!!

என் முன்னே வந்து நெளியாதே !!!!!
மனக்கட்டுபாட்டை இழந்து விடுகிறேன் !!!!

தேவதைகள் கெஞ்சினார்கள் என்பதற்காக ,
உன்னிடம் இருந்து எதையும் விட்டு கொடுத்து விடாதே !!!!



உலகத்தில்...உள்ள......பூக்கள்.....அனைத்தும்

உலகத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போட்டி போட்டும் ,
உன்னிடம் தோற்றதை என்னிடம் கூறி நீ வருத்தப் பட்டாய் !

தவறு உனதல்ல !!!!

தோற்று விடுவோம் என்று தெரிந்தும் போட்டி இட்ட பூக்களின் தவறு !!!!!

 யார் கூறியது அந்த பூக்களிடம் !!!!!

நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் ,
என் அவளின்   வாசனையை முந்திவிடலாம் என்று!!!!!!!