செம்பனூரில்தாமு என்ற இளைஞன் ஒருவன்வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலைஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனைவேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறுஅறிவுரைக் கூறினாள். அவன்சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அவன் வெகு தூரம்நடந்து சென்றான். வழியில் ஒரு சிறியகுடிசை தென்பட்டது. அங்கே போய் குடிக்கத்தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான். குடிசையில்ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் முன்பு ஒருபாம்பு படம் எடுத்து ஆடியது. அதை அடித்துக் கொன்றான். சப்தம் கேட்டு கண்விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார்.
""தம்பிஉனக்கு ஒரு மந்திரம் கற்றுத்தருகிறேன். அதை நீ சொன்னால்மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும்,'' என்றார்.
அப்பொழுதுஒரு முயல் அவனைச் சுற்றிச்சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
""அந்தமுயலைத் தூக்கி உன் மடியில்வைத்துக் கொள்,'' என்றார் முனிவர்.
அவன் அதைத் தூக்கி தன்மடியில் வைத்துக் கொண்டான். அது அவன் மடியில்அமைதியாக இருந்தது. அதை அன்போடு முதுகில்தடவிக் கொடுத்தான். அது நீண்ட நாள்பழகியதுபோல் அவன் மடியில் அமர்ந்திருந்தது.
""அதைநிற்கச் சொல்,'' என்றார்.
""முயலே! எழுந்து நில்!'' என்றான். உடனேஅது எழுந்து நின்றது.
""மிக்கநன்றி ஐயா! நான் வருகிறேன்,'' என்று கூறி அவரை வணங்கினான். குடிலை விட்டு வெளியே வந்தான். அருகில் ஏதாவது கிராமம் தென்படுமாஎன்று பார்த்தவாறு நடந்து சென்றான்.
போகும்போதே பல குயில்கள் அவன்தோள் மேல் வந்து உட்கார்ந்துகீதம் இசைத்தன. அவன் வெகுதூரம் சென்றபின்பு ஒரு கிராமம் வந்தது. அங்கு மக்கள் கும்பல் கும்பலாகநின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு போய் நின்று அவர்கள்என்ன பேசுகின்றனர் என்று கவனித்தான். புதியவனானஅவனைப் பார்த்த ஒரு முதியவர், ""தம்பி! இங்கு இரவில் சிறுத்தைப்புலிஒன்று வருகிறது. எங்கள் ஆடுகளை அதுபிடித்துச் செல்கிறது. வயலில் வேலை செய்யக்கூட மக்கள் பயப்படுகின்றனர்,'' என்றுநடுங்கிய குரலில் கூறினார் அவர்.
""ஐயா! பயப்பட வேண்டாம். நான் அதை இன்றுஇரவு பிடித்து விடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்,'' என்றான்தாமு. அவன் பேச்சைக் கேட்டுஅனைவரும் சிரித்தனர்.
""என்னதம்பி, நாங்கள் எவ்வளவோ முயற்சிசெய்து விட்டோம். தீப்பந்தம் எல்லாம் வீசி அதைவிரட்டினாலும் அது இங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கிறது. உன்னால் எப்படி அதைப்பிடிக்க முடியும்?''
""ஐயா! எனக்கு மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரம் தெரியும். என்னால் அதை வசியப்படுத்தமுடியும்,'' என்றான் தாமு.
அப்போதுஅங்கு ஒரு நாய் வந்தது. ""இதோ பாருங்கள், நான் சொல்வதை எல்லாம்இப்போது இந்த நாய் கேட்கும்,'' என்றான் தாமு.
""அன்புநாயே! இங்கே வா!'' என்றான்அவன்.
நாய் அவன் அருகில் வந்து, அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அவன் அதை இரண்டு காலால்நிற்கச் சொன்னான். உடனே அது முன்இரண்டு கால்களைத் தூக்கியபடி நின்றது. வேகமாக ஓடச் சொன்னான்; வேகமாக ஓடியது.
இதைப் பார்த்ததும் கிராம மக்களுக்கு மிகவும்ஆச்சரியமாகப் போய்விட்டது.
""சரி... எங்கள் கிராமத்திலேயே நீ தங்கியிரு. புலிவந்தால் காட்டுகிறேன்,'' என்றார் கிராமத் தலைவர்.
அவன் அருகில் இருந்த ஒருகுடிசையில் தங்கினான். கிராம மக்கள் அவனுக்குநல்ல உணவு கொடுத்து உபசரித்தனர்.
அடுத்தநாள் இரவு புலி உறுமும்சப்தம் கேட்டது.
அப்பொழுதுகிராமத் தலைவர் அவனை எழுப்பிமெல்லிய குரலில், ""தம்பி! புலி வந்திருக்கிறது,'' என்றார்.
அவன் உடனே எழுந்து சென்றுபுலியைத் தேடினான். புலி அருகில் இருந்தஒரு புதருக்குள் இருந்தது.
அவன் புலியை விசில் அடித்துக்கூப்பிட்டான். அதுவும் அமைதியாக அவனைநோக்கி வந்தது. அவன் அதன்முதுகை அன்போடு தடவிக் கொடுத்தான். இதை பல கிராம மக்கள்தங்கள் வீட்டில் ஒளிந்து கொண்டு சன்னல்வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவன் அந்தப்புலியிடம் என் பின்னே வாஎன்று சொல்லிக் காட்டுக்குள் சென்றான்.
புலியும்அவன் பின்னால் பழகிய நாய்க்குட்டி போல்காட்டுக்குள் சென்றது. நடுக்காட்டை அடைந்த அவன், ""இனிநீ காட்டை விட்டு ஊருக்குள்வரக்கூடாது,'' என்று சொல்லி அதைஅனுப்பி வைத்தான்.
அவன் திரும்பவும் கிராமத்திற்கு வந்ததும், மக்கள் எல்லாரும் அவனைக்கடவுளைப் பார்ப்பதுபோல் பார்த்தனர்.
ஒரு விழா எடுத்து அவனைப்பாராட்டினர். அவனுக்கு நிறைய பணமும் ஊருக்குச்செல்ல ஒரு அழகிய குதிரையும்கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தாமு அந்தக் குதிரையின் மேல்ஏறி ஒரு நகரத்திற்குச் சென்றான். அங்கு ஒருவன் ஆடு, கரடி, புலி முதலியவற்றை வைத்துக் கொண்டு வேடிக்கைக் காண்பித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவைகள் உண்மையானமிருகங்கள் இல்லை. எல்லாவற்றுக்குள்ளும் மனிதர்கள் மறைந்துஇருந்தனர். மிருகங்கள் போல வேடம் போட்டுக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த தாமு உண்மையானமிருகங்களை வைத்து வேடிக்கைக் காண்பித்தால்மக்கள் மிகவும் விரும்பி வேடிக்கைபார்ப்பர் என்று எண்ணினான். குரங்கு, நாய், நரி, பூனை, முயல்போன்றவற்றைப் பிடித்து வந்தான்.
குரங்குமுயலைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுவதைப்போல் பழக்கினான். நாய் மேல் நரிஉட்கார, அதன் மேல் பூனைஉட்கார்ந்தபடி நடக்கப் பழக்கினான்.
ஆட்டின்மீது குரங்கு சவாரி செய்வதுபோல்காட்டினான்.
இதையெல்லாம்மக்கள் விரும்பிப் பார்த்து அவனுக்குக் காசு போட்டனர்.
அந்த ஊர் இளவரசன் தினமும்ஒரு வெள்ளைக் குதிரையில் நாட்டை வலம் வருவதுவழக்கம். அவனிடம் இரண்டு குதிரைகள்இருந்தன. அதில் ஆண் குதிரைநோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. அதனால் பெண் குதிரைசொன்னபடி சரியாக நடக்காமல் முரண்டுபிடித்தது. ஒருநாள் இளவரசர் அதன்மீது அமர்ந்தபொழுது அது அவனைக் கீழேதள்ளி விட்டுவிட்டது. இளவரசனுக்குக் குதிரை மீது சவாரிசெய்ய முடியவில்லையே என்று மிகுந்த வருத்தம்ஏற்பட்டது.
அவன் தாமுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். உடனேஅவனை அழைத்து வர தன்காவலர்களை அனுப்பினார். தாமு வந்ததும் அவனிடம், தன் குதிரையை முன்புபோல் வழிக்குக் கொண்டு வந்தால் தக்கபரிசுகள் கொடுப்பதாகக் கூறினார்.
குதிரைலாயத்தில் நின்ற வெள்ளைக் குதிரையின்அருகில் தாமு சென்றான். அதுதன் தலையை ஆட்டி கனைத்தது. மெதுவாகப் பேசியபடி அதைத் தடவிக் கொடுத்தான். பிறகு அதன் மேல் அமர்ந்துசுற்றி வந்தான்.
அதைப் பார்த்ததும், இளவரசர் வியப்படைந்தார். தாமுவிடம்அது வெகு நாட்கள் பழகியதுபோல்நடந்து கொண்டது இளவரசனுக்கு வியப்பைத்தந்தது.
தாமு குதிரையை விட்டுக் கீழே இறங்கினான்.
""அன்பானகுதிரையே, உன் துணை இறந்துவிட்டதுவருத்தம் தருவதுதான். ஆனாலும் நீ உன்னைஅன்போடு வளர்க்கும் இளவரசருக்குத் துன்பம் தரலாமா? இனிஒழுங்காக நடந்து கொள்!'' என்றான். அவன் பேச்சைக் கூர்ந்து கேட்ட குதிரை "ஆம்' என்பது போல் கனைத்தது.
அதன்பிறகுஇளவரசரும் அந்தக் குதிரை மீதுஅமர்ந்து சவாரி செய்தார். முன்புபோல்இளவரசன் சொன்னபடி குதிரை நடைபோட்டது. மிகுந்தமகிழ்ச்சி அடைந்தான். தாமுவுக்கு நிறைய பணமும், பரிசுகளும்கொடுத்து அனுப்பினான் இளவரசன்.
இப்படியாகசிறிது காலத்திற்குள்ளே நிறைய பணம் சம்பாதித்துதன் தாயிடம் அவற்றைக் கொடுத்தான்.
அவனது திறமையை உணர்ந்து மிகுந்தமகிழ்ச்சி அடைந்தாள் அவன் தாய். விரைவிலேயேஅவனுக்குத் திருமணமும் செய்து வைத்தாள். அவன்ஊர் ஊராகச் சென்று விலங்குகளைக்கொண்டு வித்தைகள் காண்பித்து பணம் சம்பாதித்துத் தன்குடும்பத்தைக் காப்பாற்றினான்.
தன் சுற்றத்தாருக்கும், தன் ஊர் மக்களுக்கும்அடிக்கடி பல உதவிகளைச் செய்தான். அதனால் அவனை அனைவரும் பாராட்டினர். விரைவிலேயே அந்த ஊர் பெரியமனிதர்களில் ஒருவனான் தாமு