Wednesday, December 2, 2015
Sunday, November 22, 2015
Monday, October 26, 2015
இதயம்
அவன் அழகை ரசிக்க
நான் அழகு இல்லை
என் அன்பை நேசிக்க அவனிடம்
இதயம் இல்லை .......................
நான் அழகு இல்லை
என் அன்பை நேசிக்க அவனிடம்
இதயம் இல்லை .......................
அத்தனையும் உள்ளது அவளை தவிர..,
உடைத்து போன வளையல்..,
தவறி விழுந்த ஹேர் கிளிப் ..,
அவள் முகம் துடைத்த கைக்குட்டை ..,
மை தீர்ந்த பேனா..,
என அத்தனையும் இருக்கிறது என்னிடம்
தவறி விழுந்த ஹேர் கிளிப் ..,
அவள் முகம் துடைத்த கைக்குட்டை ..,
மை தீர்ந்த பேனா..,
என அத்தனையும் இருக்கிறது என்னிடம்
மறந்து ரசிக்கிறேன்
நீ பேசிடும் வார்த்தைகள் ஓவவொன்றையும்
ரசிக்கிறேன்
என் காதலை மறுத்து நீ சொன்ன பதிலையும் சேர்த்து
என் காதலை நீ மறுக்கிறாய் என்பதை மறந்து
ரசிக்கிறேன்
என் காதலை மறுத்து நீ சொன்ன பதிலையும் சேர்த்து
என் காதலை நீ மறுக்கிறாய் என்பதை மறந்து
என்றும் என்னை மறந்து விடாதே
என் பேனாவோடு எனக்கிருந்த
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது...!!
சில நேரம் வெட்கப் புன்னைகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!!!!
உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கண்ணீர் வடிக்கிறது! என் பேனா!!
சட்டையின் பையில் நீல நிறமாய்..!!!!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல் மட்டுமே உள்ளது..!!!
அடிக்கடி உன் நினைவால் துடிக்க மறக்கும்
என் இதயத்தை தன் கண்ணீர் கொண்டே
நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு..!!!!
உன்னைப் பற்றிய உரைகளை தொடர..!!!!
உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும்
நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு
புது புது வண்ணங்களை
தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது...!!
வண்ணங்களை வகைப்படுத்த
நாசாவின் விஞ்ஞானிகளின்
படையெடுப்பு என் வீட்டின் முன்னே
திருவிழாவைப் போல் உள்ளது..!!!
வாரம் சென்ற பின்னும்
தனக்கான வரிகள் மட்டும்
இன்னும் வரவில்லையே என்று
எண்ணி நேற்றைய மாலை
மரணத்தை தழுவினானடி பெண்ணே!
என் நண்பன்..!!!!
அவன் போகும் போது உனக்காக
எழுதிய கடைசி வார்த்தை கண்ணீருடன்
என்றும் “ என்னை மறந்து விடாதே heart
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது...!!
சில நேரம் வெட்கப் புன்னைகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!!!!
உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கண்ணீர் வடிக்கிறது! என் பேனா!!
சட்டையின் பையில் நீல நிறமாய்..!!!!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல் மட்டுமே உள்ளது..!!!
அடிக்கடி உன் நினைவால் துடிக்க மறக்கும்
என் இதயத்தை தன் கண்ணீர் கொண்டே
நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு..!!!!
உன்னைப் பற்றிய உரைகளை தொடர..!!!!
உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும்
நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு
புது புது வண்ணங்களை
தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது...!!
வண்ணங்களை வகைப்படுத்த
நாசாவின் விஞ்ஞானிகளின்
படையெடுப்பு என் வீட்டின் முன்னே
திருவிழாவைப் போல் உள்ளது..!!!
வாரம் சென்ற பின்னும்
தனக்கான வரிகள் மட்டும்
இன்னும் வரவில்லையே என்று
எண்ணி நேற்றைய மாலை
மரணத்தை தழுவினானடி பெண்ணே!
என் நண்பன்..!!!!
அவன் போகும் போது உனக்காக
எழுதிய கடைசி வார்த்தை கண்ணீருடன்
என்றும் “ என்னை மறந்து விடாதே heart
ஒற்றை ரோஜா
பிரியமானவர்களிடம் எல்லாம்
விடைபெற்றுக் கொண்டேன்
ஓர் நாள்
ஒற்றை ரோஜாவோடு
உனைப் பார்க்க வந்தேன்
அந்த ரோஜா
உனக்காக மலர்ந்ததல்ல
என்று நீ மறுதலித்தாய்
வருத்தத்துடன் நான்
விடைபெற்றுச் சென்றேன்
உனது பார்வைகள் தான்
பல்கலைக்கழகத்தில்
எனைப் பட்டம் வாங்க
வைத்தது
அந்த தேவதையை வாழ்வினிலே
தொலைத்தேன்
இதயத்தைப் பறித்துக் கொண்ட
அவள்
இரக்கமற்றவளாய் இருந்தாள்
அன்று ரோஜாவை
ஏற்க மறுத்த அவள்
இன்று
மலர் வளையத்தோடு வந்து
உட்கார்ந்திருந்தாள்
என் சடலத்தின் அருகில்.
விடைபெற்றுக் கொண்டேன்
ஓர் நாள்
ஒற்றை ரோஜாவோடு
உனைப் பார்க்க வந்தேன்
அந்த ரோஜா
உனக்காக மலர்ந்ததல்ல
என்று நீ மறுதலித்தாய்
வருத்தத்துடன் நான்
விடைபெற்றுச் சென்றேன்
உனது பார்வைகள் தான்
பல்கலைக்கழகத்தில்
எனைப் பட்டம் வாங்க
வைத்தது
அந்த தேவதையை வாழ்வினிலே
தொலைத்தேன்
இதயத்தைப் பறித்துக் கொண்ட
அவள்
இரக்கமற்றவளாய் இருந்தாள்
அன்று ரோஜாவை
ஏற்க மறுத்த அவள்
இன்று
மலர் வளையத்தோடு வந்து
உட்கார்ந்திருந்தாள்
என் சடலத்தின் அருகில்.
மௌனம்
உன்னை சந்திக்கும்
தருணமெல்லாம்
வழிதவறும்
என் வார்த்தைகள்
கவிதையாய் வந்து
என் காகிதம்
நிறைக்கிறது
நீ போன பின்பு.
தருணமெல்லாம்
வழிதவறும்
என் வார்த்தைகள்
கவிதையாய் வந்து
என் காகிதம்
நிறைக்கிறது
நீ போன பின்பு.
இதயம்....
நீ கடைக்கு போகும் அழகில்
தானாகவே போய் அமர்ந்து கொள்கிறது
என் இதயம் நீ எடுத்துச்செல்லும் கூடையில்.....!
தானாகவே போய் அமர்ந்து கொள்கிறது
என் இதயம் நீ எடுத்துச்செல்லும் கூடையில்.....!
கடை வீதி.....
என் கைபிடித்து கடை வீதியில்
கூட்ட நெரிசலில்
உன்னை அழைத்துவரும் வேளையில்
நம் உள்ளங்கையில் கசியும் வியர்வையின் ஈரப்பசை சொல்லும்
நம் காதலின் நெருக்கத்தை....!
கூட்ட நெரிசலில்
உன்னை அழைத்துவரும் வேளையில்
நம் உள்ளங்கையில் கசியும் வியர்வையின் ஈரப்பசை சொல்லும்
நம் காதலின் நெருக்கத்தை....!
வெட்கத்தையே தருகிறாயே…
காற்றோடு விளையடி கொண்டிருந்த உன்
சேலை தலைப்பை இழுத்து
நி இடுப்பில் செருகி கொண்டாய்
அவ்வளவுதான்……
நின்று விட்டது காற்று.
நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே… வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?
அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்…
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவதுதான்
எனக்குத்
திருவிளையாடல்.
நீஉன் கண்களின் பார்வையிலிருந்து…
விரல்களின் அசைவிலிருந்து… கொலுசின்
ஓசையிலிருந்துதான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்…
உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?
நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
அதைவிட
நீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு?
நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன்.
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது!
நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்.
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..?பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்…
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது
வானம்!
காதல்தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும்.
உன் கண்கள்
தானம் செய்ததுதான்
இந்தக் காதல்!
தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?
யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பிச்சாப்பிடும் போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகி விடுகிறது
சேலை தலைப்பை இழுத்து
நி இடுப்பில் செருகி கொண்டாய்
அவ்வளவுதான்……
நின்று விட்டது காற்று.
நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே… வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?
அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிற
எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்…
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
உன் தோழிகளோடு
கைப் பந்து
ஆடுவதுதான்
எனக்குத்
திருவிளையாடல்.
நீஉன் கண்களின் பார்வையிலிருந்து…
விரல்களின் அசைவிலிருந்து… கொலுசின்
ஓசையிலிருந்துதான் காதலை நான் கற்றுக்
கொண்டேன். ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலையெல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்…
உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?
நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
அதைவிட
நீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு?
நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன்.
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க
முடிகிறது!
நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப் பார்த்துவிட்டு
தவம் இருக்கிறேன்.
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..?பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்…
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது
வானம்!
காதல்தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும்.
உன் கண்கள்
தானம் செய்ததுதான்
இந்தக் காதல்!
தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?
யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பிச்சாப்பிடும் போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகி விடுகிறது
அனுமதின்றி குடிபுகுந்தவள்...
என் இதயத்துக்குள்
என் அனுமதின்றி
குடிபுகுந்தவள்...
வாடகையாக
ஏனோ வலியைத்தான்
தருகிறாள்...
என் அனுமதின்றி
குடிபுகுந்தவள்...
வாடகையாக
ஏனோ வலியைத்தான்
தருகிறாள்...
என் காதலை உணர்வாயோ?...
என் காதலை உணர்வாயோ?
உனை காதலிக்கிறேன் என்பதல்ல என் காதல்,
உனை காதலிப்பதனால் வாழ்கிறேன் என்பதே என் காதல்.
உனை நேசிக்கிறேன் என்பதல்ல என் நேசம்,
உனை நேசித்து சுவாசித்து வாழ்கிறேன் என்பதே என் நேசம்.
உனை விரும்புகிறேன் என்பதல்ல என் விருப்பம்,
உனைத் தவிர விருப்பம் வேறு எதிலும் இல்லை என்பதே என் விருப்பம்.
உனக்கு கோபம் வருகிறது என் மீது என்பதல்ல உனது கோபம்,
உன் கோபத்தை என் மீது மட்டுமே காட்ட வேண்டும் என்பதே கோபம்,
உனை பிறர் கோபக்காரி எனச் சொல்லாது என்னவள் நல்லவள் எனக் கேட்பதே என் விருப்பம்.
உன் கோபத்திலும், தாபத்திலும், அனைத்திலும் நானாய் மட்டுமே இருக்க உனைக் காதலிப்பதே என் காதல்.
உனை காதலிக்கிறேன் என்பதல்ல என் காதல்,
உனை காதலிப்பதனால் வாழ்கிறேன் என்பதே என் காதல்.
உனை நேசிக்கிறேன் என்பதல்ல என் நேசம்,
உனை நேசித்து சுவாசித்து வாழ்கிறேன் என்பதே என் நேசம்.
உனை விரும்புகிறேன் என்பதல்ல என் விருப்பம்,
உனைத் தவிர விருப்பம் வேறு எதிலும் இல்லை என்பதே என் விருப்பம்.
உனக்கு கோபம் வருகிறது என் மீது என்பதல்ல உனது கோபம்,
உன் கோபத்தை என் மீது மட்டுமே காட்ட வேண்டும் என்பதே கோபம்,
உனை பிறர் கோபக்காரி எனச் சொல்லாது என்னவள் நல்லவள் எனக் கேட்பதே என் விருப்பம்.
உன் கோபத்திலும், தாபத்திலும், அனைத்திலும் நானாய் மட்டுமே இருக்க உனைக் காதலிப்பதே என் காதல்.
ரொம்ப தேங்க்ஸ்ங்க!
அடித்துப் பிடித்து
ஒவ்வொரு உதவியை நான்
உனக்கு செய்யும்போதும்
அந்த இரு வார்த்தைகளில்
என்னை நீ சட்டென்று
அன்னியபடுத்துகிறாய்...
ரொம்ப தேங்க்ஸ்ங்க!
ஒவ்வொரு உதவியை நான்
உனக்கு செய்யும்போதும்
அந்த இரு வார்த்தைகளில்
என்னை நீ சட்டென்று
அன்னியபடுத்துகிறாய்...
ரொம்ப தேங்க்ஸ்ங்க!
காத்திருக்கிறேன்...
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
காத்திருக்கிறேன்...
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
புதன் கிடைக்காதென்பார்கள்...
ஊருக்குச் சென்ற என்னவள்
இப்புதனில் அதர வாய் திறந்தாள்...
'வரும் திங்கள்ன்று உனை
சந்திக்க வருகிறேன்' என்றாள்..!
புதன் புத்துணர்ச்சியில் போக
வியாழன் விறுவிறுவென மறைய
முளைக்கும் வெள்ளியோ
முகத்திரைய மூட...
சட்டென்று உதிக்கும்
சனியும் மறைய...
என் உள்ளம் மகிழவே
ஞாயிறு உதிக்கிறான்..!
என்னவள் கிளம்பும் நேரத்தில்
ஞாயிறு மறையும்...
திங்களின் காலையின்
என்றன் திங்கள் மலரும்..!
என் திடீர் சாபமும் நீங்கும்...
இன்றே அந்த திங்கள் நாளாகாதா?
ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்
என் தேவியின் தரிசனத்திற்காக..!
நினைவுகள் எட்டிப்பார்க்குது
வளர்பிறை வந்தமர்ந்த உன் நெற்றி வேண்டும் !
வானவில்லை வளைத்து நிற்கும் உன் புருவங்கள் வேண்டும் !
கயல்விளையாடும் உன் கண்கள் வேண்டும் !
கடித்து விளையாட உன் காது மடல் வேண்டும் !
முக்கனி பூட்டிய உன் சர்க்கரை இதழ்கள் வேண்டும்!
நான் முத்தமிடுகையில் சிவந்து விடும் உன் செழிய கன்னங்கள் வேண்டும் !
அமாவாசை இரவையும் தடுமாறவைக்கும் உன் கரிய கார்கூந்தல் வேண்டும் !
சோகத்தையும் சுகமாக்கும் செல்லவார்த்தைகள் கூறும் உன் செவ்வாய் வேண்டும் !
தலையணையாய் தலைசாய்க்க உன் பஞ்சு நெஞ்சு வேண்டும் !
என் ஐவிரலில் அடங்கிவிடும் உன் சின்ன இடை வேண்டும் !
அன்பாய் என் தலைகோதும் உன் வெண்டை விரல்கள் வேண்டும் !
நான் புகைக்கும் போது என் பிடரியில் தட்டும் உன் பிஞ்சு கைகள் வேண்டும் !
காலமெல்லாம் விழுந்து கிடக்க உன் கந்தக கால்கள் வேண்டும் !
ஆனால்
நீ என்னிடத்தில் ஆசையாய் பேசும்போது இடையிடையே வெளிப்படும் ஆங்கில வார்த்தைகள் மட்டும் வேண்டாம் என்பேன் அன்பே
அவை எனக்கு புரிவதும் இல்லை !
பிடிப்பதும் இல்லை !
செந்தமிழ் கூறும் உன் பால் வார்த்தைகள் மட்டும் எனக்கு வேண்டும்..........
அதில் தேள் விழுந்த கள்ளாய் கலக்கும் ஆங்கிலம் மட்டும் அறவே வேண்டாம்...........
வானவில்லை வளைத்து நிற்கும் உன் புருவங்கள் வேண்டும் !
கயல்விளையாடும் உன் கண்கள் வேண்டும் !
கடித்து விளையாட உன் காது மடல் வேண்டும் !
முக்கனி பூட்டிய உன் சர்க்கரை இதழ்கள் வேண்டும்!
நான் முத்தமிடுகையில் சிவந்து விடும் உன் செழிய கன்னங்கள் வேண்டும் !
அமாவாசை இரவையும் தடுமாறவைக்கும் உன் கரிய கார்கூந்தல் வேண்டும் !
சோகத்தையும் சுகமாக்கும் செல்லவார்த்தைகள் கூறும் உன் செவ்வாய் வேண்டும் !
தலையணையாய் தலைசாய்க்க உன் பஞ்சு நெஞ்சு வேண்டும் !
என் ஐவிரலில் அடங்கிவிடும் உன் சின்ன இடை வேண்டும் !
அன்பாய் என் தலைகோதும் உன் வெண்டை விரல்கள் வேண்டும் !
நான் புகைக்கும் போது என் பிடரியில் தட்டும் உன் பிஞ்சு கைகள் வேண்டும் !
காலமெல்லாம் விழுந்து கிடக்க உன் கந்தக கால்கள் வேண்டும் !
ஆனால்
நீ என்னிடத்தில் ஆசையாய் பேசும்போது இடையிடையே வெளிப்படும் ஆங்கில வார்த்தைகள் மட்டும் வேண்டாம் என்பேன் அன்பே
அவை எனக்கு புரிவதும் இல்லை !
பிடிப்பதும் இல்லை !
செந்தமிழ் கூறும் உன் பால் வார்த்தைகள் மட்டும் எனக்கு வேண்டும்..........
அதில் தேள் விழுந்த கள்ளாய் கலக்கும் ஆங்கிலம் மட்டும் அறவே வேண்டாம்...........
அறியா காதல் உணர்வு
பலமுறை நட்பாய்
நீ என் கரம் பிடிக்கையில்
உன்மீது உணராத
காதலை உணர்ந்தேனடா
மணநாளன்று வேறொருவன்
என் கரம் பிடித்த போது
நீ என் கரம் பிடிக்கையில்
உன்மீது உணராத
காதலை உணர்ந்தேனடா
மணநாளன்று வேறொருவன்
என் கரம் பிடித்த போது
அறியா காதல் உணர்வு
பலமுறை நட்பாய்
நீ என் கரம் பிடிக்கையில்
உன்மீது உணராத
காதலை உணர்ந்தேனடா
மணநாளன்று வேறொருவன்
என் கரம் பிடித்த போது
நீ என் கரம் பிடிக்கையில்
உன்மீது உணராத
காதலை உணர்ந்தேனடா
மணநாளன்று வேறொருவன்
என் கரம் பிடித்த போது
உன் பிறந்த நாள்...!
சுழல்கின்ற பூமியினுள்
சுழலாத சூறாவளியாய்
உன் அன்பு,
சுழற்றி அடிக்கிறது என்னை...!
உன் கண்களின் ஒருநிமிட
சந்திப்பில் என் ஒட்டுமொத்த
உணர்சிக் குருவிகளெல்லாம்
சிறகு முளைத்துப்
பறக்கத் துவங்குகின்றன....!
என் உணர்வுகள்
ஒருங்கிணைந்து
உருவான,
குழந்தை நீ ...!
இன்று,
நீ மகிழ்ந்தால்
உன் பற்களாய் பிறவியுற்று
பிரகாசமாய்ப் புன்னகைப்பேன்...!
துன்பத்தில் உழன்றால் ,
உன் கண்ணீராய்க்
கரைபுரண்டோடி
கவலைகளைக் கரைத்திடுவேன்...!
உன் பிறந்தநாள்
பந்தங்களிடையே
பழகிப்போனாலும்,
ஏனோ
இன்று எனக்கு மட்டும்
புதிதாய்ப் பிறந்த நீ...!
சுழலாத சூறாவளியாய்
உன் அன்பு,
சுழற்றி அடிக்கிறது என்னை...!
உன் கண்களின் ஒருநிமிட
சந்திப்பில் என் ஒட்டுமொத்த
உணர்சிக் குருவிகளெல்லாம்
சிறகு முளைத்துப்
பறக்கத் துவங்குகின்றன....!
என் உணர்வுகள்
ஒருங்கிணைந்து
உருவான,
குழந்தை நீ ...!
இன்று,
நீ மகிழ்ந்தால்
உன் பற்களாய் பிறவியுற்று
பிரகாசமாய்ப் புன்னகைப்பேன்...!
துன்பத்தில் உழன்றால் ,
உன் கண்ணீராய்க்
கரைபுரண்டோடி
கவலைகளைக் கரைத்திடுவேன்...!
உன் பிறந்தநாள்
பந்தங்களிடையே
பழகிப்போனாலும்,
ஏனோ
இன்று எனக்கு மட்டும்
புதிதாய்ப் பிறந்த நீ...!
உன் நட்பெனும்
உன் நட்பெனும்
சிறையில்லா கூண்டில்
சிறகில்லா பறவை நான்!..
விடுதலையாக விருப்பம் இல்லை,
இந்த உலகை விட
உன் நட்பு பெரியதானதால்...
சிறையில்லா கூண்டில்
சிறகில்லா பறவை நான்!..
விடுதலையாக விருப்பம் இல்லை,
இந்த உலகை விட
உன் நட்பு பெரியதானதால்...
தூரத்தில் தேவதையாய்..!
நள்ளிரவுப் பெண்ணோ
நைச்சியமாய்
ஒளிந்து கொள்ள முயற்சிக்க...
அதிகாலைச் சூரியனோ
அடித்துப் போட்டது
போல் உறங்கிக் கொண்டிருக்க...
உருண்டை வடிவ உலகமோ
விடியலுக்காக
கண்ணயர்ந்து காத்திருக்க...
கணமணி உன் வரவிற்காக
கண் விழித்துக் காத்திருந்தேன்
புவி முனையில்...
காத்திருந்து காத்திருந்து
கால்கள் ஓய்ந்து விட
கண்கள் சோர்ந்து விட
தூரத்தில் தேவதையாய்
நீ வருவதைக் கண்டேன்..!
நெடும்பயண களைப்பில்
நடை தளர்ந்து நீ வந்தாலும்
எனைக்கண்டதும்
ஒளிவீசும் வைரமானாய்..!
அவ்வொளி வெளிச்சம்
உனைக் கண்டதும்
என்னுள்ளும் பரவ...!
நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாகச் சூரியன்...
அதனுடைய வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட...
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..! கண்ணிலடி..!
நைச்சியமாய்
ஒளிந்து கொள்ள முயற்சிக்க...
அதிகாலைச் சூரியனோ
அடித்துப் போட்டது
போல் உறங்கிக் கொண்டிருக்க...
உருண்டை வடிவ உலகமோ
விடியலுக்காக
கண்ணயர்ந்து காத்திருக்க...
கணமணி உன் வரவிற்காக
கண் விழித்துக் காத்திருந்தேன்
புவி முனையில்...
காத்திருந்து காத்திருந்து
கால்கள் ஓய்ந்து விட
கண்கள் சோர்ந்து விட
தூரத்தில் தேவதையாய்
நீ வருவதைக் கண்டேன்..!
நெடும்பயண களைப்பில்
நடை தளர்ந்து நீ வந்தாலும்
எனைக்கண்டதும்
ஒளிவீசும் வைரமானாய்..!
அவ்வொளி வெளிச்சம்
உனைக் கண்டதும்
என்னுள்ளும் பரவ...!
நம் கண்கள் நான்கும்
சந்தித்த வேளையில்...
அங்கே உதித்ததடி நம்
காதலின் உற்சாகச் சூரியன்...
அதனுடைய வெளிச்சத்தில்
இருந்த களைப்பு
இடம் தெரியாமல் போய்விட...
என் நிலவைக் கண்ட மகிழ்வில்
என்னிதயம் விண்ணிலடி
என்னழகே உன் அன்பு
என் கண்ணிலடி..! கண்ணிலடி..!
காதல் அடிமையாய் .......
என் ஆசைக்காதலனே தினமும்
விடியும் பொழுதுகளில் உனக்கு
முன் நான் எழுந்து குளித்து பொட்டு
வைத்து எந்தன் நெற்றி பொட்டு
உந்தன் நெற்றியில் பிறை சந்திரனாய்
பதிந்து விட அழுத்தியே உனக்கு
நான் முத்தமிட்டு உன்னை எழுப்பிட
வேண்டும் நீயும் ஆனந்தத்தில்
என்னை அணைத்திட வேண்டும் ♥
உனக்கு நான் உணவூட்டிட வேண்டும்
உன் எச்சில் பட்ட உணவை நானும்
உண்டு பசி ஆறிட வேண்டும் ........
வெளியே செல்லும் உனக்கு
உன் வழித்துணையாய்
என் இதழ் முத்தம் தந்து
அனுப்பிட வேண்டும் ♥
நீ இன்றி நான் தனித்திருக்கும்
நிமிடங்கள் உந்தன் நினைவால்
எனக்கு சுட்டிட வேண்டும்
நீ வந்ததும் உன்னை வந்து
கட்டி அணைத்திட வேண்டும்♥)
மாலை நேரம் உன்னுடன் தேநீர்
சுவைத்திட வேண்டும் ..என்
தோள்களிலே உன்னை அணைத்து
உந்தன் உஷ்ணகாற்று எந்தன்
காதோரம் கதை பேச பதிலுக்கு
உந்தன் கழுத்தோரம் நான்
என் இதழ் பதித்திட வேண்டும் .... ♥
இப்படியே உன்மீது பித்துக்கொண்டு
நான் வாழ்ந்திட வேண்டும்
வாழும் காலம் வரை உனக்கு
சேவை செய்திடும் உந்தன்
காதல் அடிமையாய் .......♥
விடியும் பொழுதுகளில் உனக்கு
முன் நான் எழுந்து குளித்து பொட்டு
வைத்து எந்தன் நெற்றி பொட்டு
உந்தன் நெற்றியில் பிறை சந்திரனாய்
பதிந்து விட அழுத்தியே உனக்கு
நான் முத்தமிட்டு உன்னை எழுப்பிட
வேண்டும் நீயும் ஆனந்தத்தில்
என்னை அணைத்திட வேண்டும் ♥
உனக்கு நான் உணவூட்டிட வேண்டும்
உன் எச்சில் பட்ட உணவை நானும்
உண்டு பசி ஆறிட வேண்டும் ........
வெளியே செல்லும் உனக்கு
உன் வழித்துணையாய்
என் இதழ் முத்தம் தந்து
அனுப்பிட வேண்டும் ♥
நீ இன்றி நான் தனித்திருக்கும்
நிமிடங்கள் உந்தன் நினைவால்
எனக்கு சுட்டிட வேண்டும்
நீ வந்ததும் உன்னை வந்து
கட்டி அணைத்திட வேண்டும்♥)
மாலை நேரம் உன்னுடன் தேநீர்
சுவைத்திட வேண்டும் ..என்
தோள்களிலே உன்னை அணைத்து
உந்தன் உஷ்ணகாற்று எந்தன்
காதோரம் கதை பேச பதிலுக்கு
உந்தன் கழுத்தோரம் நான்
என் இதழ் பதித்திட வேண்டும் .... ♥
இப்படியே உன்மீது பித்துக்கொண்டு
நான் வாழ்ந்திட வேண்டும்
வாழும் காலம் வரை உனக்கு
சேவை செய்திடும் உந்தன்
காதல் அடிமையாய் .......♥
உதாசீனப்படுத்தும் சொல் கூட..!
“ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!
மாற்றுத்திறனாளிகள்...
சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளால்
மாற்றுத்திறனாளிகள் என்று
பெயர் மாற்றம் செய்யப்பட்டு
வரும் ஒரு சிசிக்குழந்தை
ஊனம்...!
எங்களின் தாய்தந்தை செய்த
தவற்றினால் நாங்கள்
கருப்பை தவறிவிட்டோம் ...
எக்காலத்தில் செய்த ஊழோ
தெரியவில்லை...
இன்று,
எம் ஊழுடம்பைச் சுற்றி
வாதை கூடாரமிட்டுள்ளது...!
அனாதைகள் அனைவரும்
கடவுளின் குழந்தைகளாம்....
நாங்கள் அனாதைகளல்ல ..
பெற்றோரிருந்தும் பிரயோசனப்படாத
பிரகஸ்பதிகள்...!
உடல் உறுப்புகள் மட்டுமே
உதிர்ந்துள்ளது எங்களிடம்...
மனவுறுதியை மட்டும்
குன்றம் போல் குவித்திருக்கிறோம்...!
எங்களின் கண்கள்
மனிதனை மனிதனாகத்தான்
பிரதிபலிக்கும் ...
ஆனால் ,
உடலுறுப்புகள் அனைத்தும்
ஒருங்கமைக்கப்பட்ட
மானசீக மனிதங்களின்
பார்வையில் நாங்கள்
"மனிதப் பிறவியெடுத்து
நெளியும் மண்புழு வகையினர்"
எங்களைப் பரிதாபப் படுத்தி
பாத்திரத்தைக் கொடுத்துவிடாதீர்....
பழகிவிடும் என் சாதியினருக்கு,
உழைக்கும் வர்க்கத்திடமிருந்து
பிழைக்கக் கற்றுக்கொள்ளும் வித்தை...!
ஊனம் என் உடம்பில் மட்டுமே..!
உழைப்பிற்கு இல்லை,
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்துகொண்டே இருப்போம் ,
எங்கள் மனவுறுதியை
ஊன்றுகோலாக்கி....!
மாற்றுத்திறனாளிகள் என்று
பெயர் மாற்றம் செய்யப்பட்டு
வரும் ஒரு சிசிக்குழந்தை
ஊனம்...!
எங்களின் தாய்தந்தை செய்த
தவற்றினால் நாங்கள்
கருப்பை தவறிவிட்டோம் ...
எக்காலத்தில் செய்த ஊழோ
தெரியவில்லை...
இன்று,
எம் ஊழுடம்பைச் சுற்றி
வாதை கூடாரமிட்டுள்ளது...!
அனாதைகள் அனைவரும்
கடவுளின் குழந்தைகளாம்....
நாங்கள் அனாதைகளல்ல ..
பெற்றோரிருந்தும் பிரயோசனப்படாத
பிரகஸ்பதிகள்...!
உடல் உறுப்புகள் மட்டுமே
உதிர்ந்துள்ளது எங்களிடம்...
மனவுறுதியை மட்டும்
குன்றம் போல் குவித்திருக்கிறோம்...!
எங்களின் கண்கள்
மனிதனை மனிதனாகத்தான்
பிரதிபலிக்கும் ...
ஆனால் ,
உடலுறுப்புகள் அனைத்தும்
ஒருங்கமைக்கப்பட்ட
மானசீக மனிதங்களின்
பார்வையில் நாங்கள்
"மனிதப் பிறவியெடுத்து
நெளியும் மண்புழு வகையினர்"
எங்களைப் பரிதாபப் படுத்தி
பாத்திரத்தைக் கொடுத்துவிடாதீர்....
பழகிவிடும் என் சாதியினருக்கு,
உழைக்கும் வர்க்கத்திடமிருந்து
பிழைக்கக் கற்றுக்கொள்ளும் வித்தை...!
ஊனம் என் உடம்பில் மட்டுமே..!
உழைப்பிற்கு இல்லை,
எத்தனை முறை விழுந்தாலும்
எழுந்துகொண்டே இருப்போம் ,
எங்கள் மனவுறுதியை
ஊன்றுகோலாக்கி....!
சென்று வருகிறேன்
விட்டுப் பிரிந்த நினைவுகளும்
தொட்டு தொலைந்த கனவுகளும்
கையை விட்டு கரைந்தாலும்
காலங்கள் போட்டு வைத்த
கணக்கில்லா புள்ளிக்கோலங்களில்
கரைந்து காணாமலே போகிறேன்
என்றாவது என் சொற்கள்
உன் நினைவலைகளை மோதிச்செல்லும்...
அந்த நொடியினில் அரைகுறையாய்
என் ஞாபகம் வந்து செல்லும்..
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
எப்படியும் நான் இருந்தேன் என்று
உனக்கு சொல்லிவிடும்.
அந்த நேரம் அருகில் அமர்ந்து
ஆறுதல் சொல்ல நானிருக்கமாட்டேன்...
அகமும் புறமும் உணர்ந்த நாம்
முகமே பார்க்க முடியாது போயிருக்கும்
சுழலும் கால சக்கரத்தில்
என் நினைவு தூசிகளும்
எங்கோ சென்றிருக்கும் உன்னை விட்டு...!
தொட்டு தொலைந்த கனவுகளும்
கையை விட்டு கரைந்தாலும்
காலங்கள் போட்டு வைத்த
கணக்கில்லா புள்ளிக்கோலங்களில்
கரைந்து காணாமலே போகிறேன்
என்றாவது என் சொற்கள்
உன் நினைவலைகளை மோதிச்செல்லும்...
அந்த நொடியினில் அரைகுறையாய்
என் ஞாபகம் வந்து செல்லும்..
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
எப்படியும் நான் இருந்தேன் என்று
உனக்கு சொல்லிவிடும்.
அந்த நேரம் அருகில் அமர்ந்து
ஆறுதல் சொல்ல நானிருக்கமாட்டேன்...
அகமும் புறமும் உணர்ந்த நாம்
முகமே பார்க்க முடியாது போயிருக்கும்
சுழலும் கால சக்கரத்தில்
என் நினைவு தூசிகளும்
எங்கோ சென்றிருக்கும் உன்னை விட்டு...!
வீழ்வே னென்று நினைத் தாயோ?...
தேடிச்சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
தொலைத்த பின்னும் நிம்மதி..!
யாரேனும் தனக்குரிய
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்து
விட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை
உன்னிடம்தான் - அதுவும்
உரியவளிடம்தான்
தொலைத்திருக்கிறேன்
என் மன நிம்மதியோடு..!
பொருளைத் தொலைத்து விட்டால்
நிம்மதியாய் உறங்குவார்களா..?
ஆனால் நான் உறங்குகிறேன்..!
என் மனதை தொலைத்து
விட்ட பின்பும்
நிம்மதியாய் உறங்குகிறேன்..!
ஏனெனில்…
என் மனதை
உன்னிடம்தான் - அதுவும்
உரியவளிடம்தான்
தொலைத்திருக்கிறேன்
என் மன நிம்மதியோடு..!
என் தேகத்தில் சந்தேகம்..! - வசன கவிதை
அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!
என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?
என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?
அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?
பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...
கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!
என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?
என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?
அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?
பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...
கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?
என் இனிய மருத்துவச்சி...!
என்னை
காயப்படுத்தும் வலிமை
எவர்க்கும் உண்டு
காயம்
எவ்வகையானாலும்
குணபடுத்தும் வல்லமை
உனக்கே உண்டு -என்
இனிய மருத்துவச்சியே
படித்தது பொறியியல்
என்றாலும் -நீ
தேர்ச்சி பெற்றது
மருத்துவத்திலும் தான் ...!
கனவாகிப்போன காதல்!!!!!
உன்னை பார்த்த முதல் கணமே,
உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ...
உன் மீன் போன்ற விழிகளால் வலை
விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்...
உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ...
இமை மூட பயந்தேன் , .
நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்...
உன்னை பார்த்த நிமிடங்களை ,
பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்..
உன்னை காணாத நொடிகளை,
நகர்த்த முயற்சி செய்தேன்...
உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு,
கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ...
என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா?
என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் ..
நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்..
இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன்,
உன்னில் உயிராக வாழ ...
உன்னை விட்டு பிரிய போகிறேன்
உன் அனுமதியின்றி கண்ணீருடன் ,
உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று..
.காரணம் கேட்காதே ...
இது விதியின் வஞ்சனை,...
உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ...
உன் மீன் போன்ற விழிகளால் வலை
விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்...
உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ...
இமை மூட பயந்தேன் , .
நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்...
உன்னை பார்த்த நிமிடங்களை ,
பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்..
உன்னை காணாத நொடிகளை,
நகர்த்த முயற்சி செய்தேன்...
உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு,
கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ...
என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா?
என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் ..
நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்..
இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன்,
உன்னில் உயிராக வாழ ...
உன்னை விட்டு பிரிய போகிறேன்
உன் அனுமதியின்றி கண்ணீருடன் ,
உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று..
.காரணம் கேட்காதே ...
இது விதியின் வஞ்சனை,...
கிழித்தெறிந்து
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்...
சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன் அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்...
வேண்டுமானாலும்
குழந்தையாகலாம்
உன் மடி கிடைக்கும்
என்றால்...
சொர்கத்தில் இருக்கும்
என் காதலைத்தான்
உனக்கு கவிதையாய்
தருகிறேன் அதை நீ
தெரிந்தோ
தெரியாமலோ
கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்...
வேரென நீ இருந்தாய்..!
உன்னைப் பிரிந்திருந்து சிலதை
உற்றிட நேருகையில்
என்னமோ தெரியவில்லை
இதயம் இறங்கித் துடிக்குதடி!
மூர்ச்சையாய்ப் போம் பயத்தில்
இமையை மூட நினைத்திடிலோ
ஆச்சர்யப்படும் வகையில் விழி நீர்
ஆவியில் உயிர்க்குதடி!
என்னை மறைக்க எண்ணி அடக்கி
எச்சில் விழுங்கையிலே
உந்தன் உமிழ் நீரே சுவையாய்
உதட்டினுள் ஊறுதடி!
தூக்கெனச் சொல்லிப் பிள்ளை தனது
தாயினைக் கெஞ்சுகையில் வரும்
ஏக்கமும் முகக் குழைவும் எனை நீ
இரப்பதாய்த் தோன்றுதடி!
ஏதோ நினைக்குதடி மனசு
எதற்கும் கலங்குதடி
பாதி இறந்து விட்டேன் முடிவினைப்
பார்க்க நீ வருவாயோ..?
வேரென நீ இருந்தாய்..!
உன்னைப் பிரிந்திருந்து சிலதை
உற்றிட நேருகையில்
என்னமோ தெரியவில்லை
இதயம் இறங்கித் துடிக்குதடி!
மூர்ச்சையாய்ப் போம் பயத்தில்
இமையை மூட நினைத்திடிலோ
ஆச்சர்யப்படும் வகையில் விழி நீர்
ஆவியில் உயிர்க்குதடி!
என்னை மறைக்க எண்ணி அடக்கி
எச்சில் விழுங்கையிலே
உந்தன் உமிழ் நீரே சுவையாய்
உதட்டினுள் ஊறுதடி!
தூக்கெனச் சொல்லிப் பிள்ளை தனது
தாயினைக் கெஞ்சுகையில் வரும்
ஏக்கமும் முகக் குழைவும் எனை நீ
இரப்பதாய்த் தோன்றுதடி!
ஏதோ நினைக்குதடி மனசு
எதற்கும் கலங்குதடி
பாதி இறந்து விட்டேன் முடிவினைப்
பார்க்க நீ வருவாயோ..?
உன்னில் தொலைந்த என்னிதயத்தை!
நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!.
*
உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!
*
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
*
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
*
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!.
*
உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!
*
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
*
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
*
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!
பருத்திவீரன் (கிராமத்து கவிதை)
என்னவளே முத்தழகு.!.
கண் திறந்து உன்னோடு
கைகோர்த்து கண்ணாம்பூச்சி
ஆடிய நாள் முதலா
என் கனவோடு ஒழுஞ்சிகிட்டு
நெஞ்சோடு மறஞ்சுகிட்டு தினம்
என் நினைவோடு உரசிகிட்டு
நீதான் புள்ள வாழர....
என்னவளே முத்தழகு.!.
ஒத்த கல்லு மூக்குத்தியோட
ஒத்த ஜடை பின்னிக்கிட்டு
ஒத்த ரூபா பொட்டு வச்சு
நீ ஒத்தையில வர
ஓரமா நின்னு பாத்துட்டு
பின்னாடி ஓடிவந்து
முத்தம் கொடுத்தது
நினைவிருக்க முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
கருவேலம் காட்டோரம்
கருவாச்சி உன்னை பாக்க
கால்கடுக்க நின்னுகிட்டு
உன் கனவோடு கதைபேசி
காத்திருந்த நேரமெல்லாம்
என் கண்ணுக்குள்ளே
நிக்கிதடி முத்தழகு.....
என்னவளே முத்தழகு.!.
என்னை குவாட்டர் அடிக்க வச்சு
குப்புற சாசுபுட்டு
என் நெஞ்சோடு உன் பெயரை
பச்சை குத்தி வச்சு என்
உடலோடு உன் பெயரை
உலவ விட்டாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
ஊரை பகசுகிட்டு
ஊதாரிய சுத்திகிட்டு
தண்ணிய குடுசுக்கும்
தறுதலையா திரிந்த என்னை
கண்ணாடி பாக்கவச்ச
கவிதையும் எழுதவச்ச
தனியே சிரிக்கவும் வச்சாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
கயிலிய மடுச்சு
கால் தெரிய கட்டிக்கிட்டு
அறிவால தூக்கிகிட்டு தினம்
போலிஸ்க்கு பின்னாடி நின்னு
போட்டோக்கு போஸ் கொடுத்து
போராச்சு சித்தப்பு
எவனாச்சையும் போட்டுட்டு
சென்ரல் ஜெயில பக்கனுமுன்னு
ஆசைப்பட்ட என்னை
உன் அன்பால கட்டிபோட்டு
நெஞ்சில் அம்புவிட
வைத்தாயே முத்தழகு.....
என்னவளே முத்தழகு.!.
ஊரையும் உதரிட்டு
உறவையும் மறந்துட்டு நீ
உயிரா நினச்ச என்னோடு
ஓடி வந்தாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
ஓடிவரும் வேலையிலே
ஒத்த வீட்டில் உன்னை
ஒத்தையிலே விட்டுபுட்டு
செவ்வால சித்தபாவை
கூட்டிவர நான் போக
நாலு பேரு உன்னை
நாசம் பண்ணிட்டாங்கலே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
ஊர் வந்து பாத்து
உண்மை அறியும் முன்பே
என்னை காணா பொணமாக்குனு
கடைசி மூச்சு விட்டாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு .!.
கருவாச்சி உன் பெயர் என்றாலும்
கண்ணகிய வாழ்ந்த
என்னை காதலுச்ச பாவத்தால
இன்று என் பாவத்தையெல்லாம்
நீ சுமந்து போனாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
உயிரோடு நீயிருந்த
எனக்கு உறவேதும் தேவையில்லை
பருத்திவீரனா நாயிருந்தும்
உன்னை பாதுகாக்க முடியல
உன்னை கானா பொணமாக்கி
நான் நடமாடும் பொணமாகிறேன முத்தழகு....
கண் திறந்து உன்னோடு
கைகோர்த்து கண்ணாம்பூச்சி
ஆடிய நாள் முதலா
என் கனவோடு ஒழுஞ்சிகிட்டு
நெஞ்சோடு மறஞ்சுகிட்டு தினம்
என் நினைவோடு உரசிகிட்டு
நீதான் புள்ள வாழர....
என்னவளே முத்தழகு.!.
ஒத்த கல்லு மூக்குத்தியோட
ஒத்த ஜடை பின்னிக்கிட்டு
ஒத்த ரூபா பொட்டு வச்சு
நீ ஒத்தையில வர
ஓரமா நின்னு பாத்துட்டு
பின்னாடி ஓடிவந்து
முத்தம் கொடுத்தது
நினைவிருக்க முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
கருவேலம் காட்டோரம்
கருவாச்சி உன்னை பாக்க
கால்கடுக்க நின்னுகிட்டு
உன் கனவோடு கதைபேசி
காத்திருந்த நேரமெல்லாம்
என் கண்ணுக்குள்ளே
நிக்கிதடி முத்தழகு.....
என்னவளே முத்தழகு.!.
என்னை குவாட்டர் அடிக்க வச்சு
குப்புற சாசுபுட்டு
என் நெஞ்சோடு உன் பெயரை
பச்சை குத்தி வச்சு என்
உடலோடு உன் பெயரை
உலவ விட்டாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
ஊரை பகசுகிட்டு
ஊதாரிய சுத்திகிட்டு
தண்ணிய குடுசுக்கும்
தறுதலையா திரிந்த என்னை
கண்ணாடி பாக்கவச்ச
கவிதையும் எழுதவச்ச
தனியே சிரிக்கவும் வச்சாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
கயிலிய மடுச்சு
கால் தெரிய கட்டிக்கிட்டு
அறிவால தூக்கிகிட்டு தினம்
போலிஸ்க்கு பின்னாடி நின்னு
போட்டோக்கு போஸ் கொடுத்து
போராச்சு சித்தப்பு
எவனாச்சையும் போட்டுட்டு
சென்ரல் ஜெயில பக்கனுமுன்னு
ஆசைப்பட்ட என்னை
உன் அன்பால கட்டிபோட்டு
நெஞ்சில் அம்புவிட
வைத்தாயே முத்தழகு.....
என்னவளே முத்தழகு.!.
ஊரையும் உதரிட்டு
உறவையும் மறந்துட்டு நீ
உயிரா நினச்ச என்னோடு
ஓடி வந்தாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
ஓடிவரும் வேலையிலே
ஒத்த வீட்டில் உன்னை
ஒத்தையிலே விட்டுபுட்டு
செவ்வால சித்தபாவை
கூட்டிவர நான் போக
நாலு பேரு உன்னை
நாசம் பண்ணிட்டாங்கலே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
ஊர் வந்து பாத்து
உண்மை அறியும் முன்பே
என்னை காணா பொணமாக்குனு
கடைசி மூச்சு விட்டாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு .!.
கருவாச்சி உன் பெயர் என்றாலும்
கண்ணகிய வாழ்ந்த
என்னை காதலுச்ச பாவத்தால
இன்று என் பாவத்தையெல்லாம்
நீ சுமந்து போனாயே முத்தழகு....
என்னவளே முத்தழகு.!.
உயிரோடு நீயிருந்த
எனக்கு உறவேதும் தேவையில்லை
பருத்திவீரனா நாயிருந்தும்
உன்னை பாதுகாக்க முடியல
உன்னை கானா பொணமாக்கி
நான் நடமாடும் பொணமாகிறேன முத்தழகு....
என்னை அறியாமலேயே...
இப்போதும்
அடிக்கடி
உன் நினைவுகள்
எழும்,
சில் மிஷங்களும்
பரிமாறல்களும்
என்னை அறியாமலேயே
உதட்டில்
புன்னகையைத் தோற்றுவிக்கும்,
வீதியில் போகும் போது
நான் அடிக்கடி சிரிப்பதாக
தெரிந்தவர்கள் கூறுவார்கள்
காரணம் இதுவாகவும்
இருக்கலாம்,
நானும்
பலர் தன் பாட்டிற் சிரிப்பதை
வீதிகளில் கண்டிருக்கிறேன்
அவர்களுக்கும்
இது தான் காரணமோ தெரியவில்லை,
ஆனாலும்
கடந்த காலங்களைப்போல
அந்தச் சிரிப்புக்கு பின்னர்
எழுவதான
’கண்ணீரும் மனச்சோர்வும்’
இப்போது
இல்லை என்றே கூறுவேன்,
ஆயினும்
உன் நினைவுகள்
அடிக்கடி எழும்
ஏதோ எழுதுவேன்
மெளனமாவேன்..
Subscribe to:
Posts (Atom)