ஒரு காட்டில் சிங்கம், கரடி, நரி மூன்றும்நண்பர்களாக, ஒன்றாக வசித்தன. வேட்டையாடஒன்றாகவே செல்லும். வழக்கம் போல் ஒருநாள், மூன்றும் வேட்டைக்குக் கிளம்பின. கிடைக்கும் இரையில் மூவரும் சமமாகபங்கிட்டுக் கொள்வது என்பது ஏற்பாடு. பாதையில் ஒரு மான் குறுக்கிட்டது. சிங்கம் ஒரே அடியில் அதைஅடித்து வீழ்த்தியது.
""இந்தமானை பங்குப் போடு!'' என்றுகரடிக்கு உத்தரவிட்டது சிங்கம்.
கரடி மிகவும் சிரமப்பட்டு அந்தமானை மூன்று பங்காக்கியது. ""இதோ பங்குகள்தயார்!'' என்றது. சிங்கத்திற்கு கோபம்வந்துவிட்டது.
""சமமா? எது சமம்? யாருக்கு யார்சமம்?'' என்று கேட்டு, கரடிமீது பாய்நது குதறியது சிங்கம். ராஜ மரியாதை தெரியாத உனக்குஇந்தக் கதிதான்,'' என்றது சிங்கம்.
பின்னர்நரியைப் பார்த்து கட்டளையிட்டது சிங்கம். ""இதைப் பங்கு போடு!''
நரி சிரமப்படவில்லை. எல்லாப் பங்கையும் சிங்கத்தின்முன்பே குவித்தது. தனக்கு முன்பு ஒருமிகச் சிறிய துண்டை மட்டும்வைத்துக் கொண்டது. ""அரசே! இதோ தங்கள்பங்கு!'' என்றது நரி.
சிங்கத்திற்குமகிழ்ச்சி தாங்கவில்லை. ""சபாஷ் நரியே! உன்புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகிறேன். என்ன பணிவு. ராஜமரியாதை என்ன என்பது உனக்குத்தான் தெரிந்திருக்கிறது. நீ மகா மகாபுத்திசாலிடா... இந்த பாடத்தை எல்லாம்எங்கேடா கத்துக்கிட்ட!'' என்று சிங்கம் பாராட்டுமழை பொழிந்தது.
நரி பணிவுடன் சொன்னது! ""அரசே! நான் பிறவியிலேயேபுத்திசாலி இல்லை. இப்போதுதான் நான்புத்திசாலியானேன். தங்கள் பாராட்டுகளையும் பெறுகிறேன்.''
""அதெப்படிதிடீரென்று இப்பொழுதே புத்திசாலியானாய்?''
""பிரபுவே! சற்று முன்பு தான் புத்திசாலியானேன். இதோ செத்துக் கிடக்கிறதே, இந்தக் கரடிதான் என்ஞான குரு!'' என்றது நரி.
"ஹ... ஹ... ஹா...' என்று சிரித்ததுசிங்கம்.
***
No comments:
Post a Comment